08 September, 2018

தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்


நான் சிறுவனாக இருந்த பொழுது தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தின் சில காட்சிகளைக் கண்டுள்ளேன். அதன் மூல நாடக வடிவான புத்தகம் ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைத்தது.

சில வருடங்களுக்கு முன்னர் Komal Theatre மேடை நாடகமாக அரங்கேற்றியது.



பக்கம் 61இல் வாத்தியார் வைத்திலிங்கத்தின் உரையாடல் இப்பொழுதும் பொருந்தும்.



1981 இல் வெளிவந்த தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தின் முழு பகுதியும் YouTubeஇல் உள்ளது.





குறிப்பு: 7-October-18 அன்று பதிவு செய்தவை:
6-October-18 அன்று தினத்தந்தியில் முத்துச்சரம் பிரிவில் தண்ணீரில் தேடலைச் சொன்ன அவர் டெய்லி பிரட் என்ற திரைப்படத்தின் விமர்சனம் வெளியானது. அதில் தண்ணீர் தண்ணீர் படம் இதை தழுவியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


பின் Google செய்த பொழுது, Pride of Tamil Cinema: 1931 TO 2013 என்ற புத்தகம் கிடைத்தது. 



அதிலும், நூலாசிரியர் அவ்வாறே கூறியுள்ளார்.



1934 இல் வெளிவந்த Our Daily Bread திரைப்படத்தின் முழு பகுதியும் YouTubeஇல் உள்ளது.




தண்ணீர் தண்ணீர் திரைப்படம், 1980இல் வெளியான கோமல் சுவாமிநாதனின் நாடகத்தை மூலமாக எடுத்த படம். எனவே, கோமல் சுவாமிநாதனின் நாடகமே அந்த ஆங்கிலப்படத்தின் தழுவலாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

20 August, 2018

அடியாள் - சிறை சென்றவரின் அனுபவங்கள்


இந்த காலத்துச் சிறை வாழ்க்கை எப்படி இருக்குமென்று தெரிவதற்கு டாக்டர். எல். பிரகாஷ் எழுதிய சிறையின் மறுபக்கம், ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் மற்றும் மகாநதி, விருமாண்டி திரைப்படங்கள்   நினைவிற்கு வரும்.

சென்னையில் உள்ள மத்திய சிறைச்சாலையை இடிக்கும் முன்னர், எனது அலுவல நண்பர்களுடன் காணச் சென்றோம். எனது நண்பர், அங்கே எடுத்த அனைத்து புகைப்படங்களையும், தனது முகப்புத்தகத்தில் பதிந்துள்ளார்.

இந்த புத்தகத்தைப் படிக்கும்பொழுது அந்த ஞாபகங்கள் வந்தன.
நான் முதன் முதலில் கைதானது ஓர் அடியாளாக. இப்போது கைதாகி இருப்பது ஒரு போராளியாக. 
என்று தான் இரண்டு முறை சிறைக்குச் சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.


தான் முதன் முதலாக கடலூர் சிறை சென்ற பொழுது ஜான் டேவிட்டும் அதே சிறையில் இருந்துள்ளார். பின்வருபவை சிறை நண்பருடன் நடந்த கலந்துரையாடல்.
'ஜோதி! இங்க வா! இதுதான் பாரதியார் இருந்த சிறை' என்று ஓர் அறையைக் காட்டினார்.
'அப்பிடியா?' 
'ஆமா. பாரதியை இந்தச் செல்லுலதான் அடைச்சு வச்சிருந்தாங்களாம். அதோ அங்க கல்வெட்டு இருக்குது பாரு.' 
'சரி. இப்ப இங்க இருக்கிறது யாரு?' 
'இப்ப யாரும் இங்க இல்ல. இந்துக்களுக்கு மாரியம்மன் கோயில் இருக்கிறது மாதிரி இது கிறிஸ்துவக் கைதிகளின் தேவாலயமாக இருக்குது.' 
உள்ளே நுழைந்தோம். மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வந்த பூங்காவாக அந்த இடம் இருந்தது. இரு புறமும் பூச்செடிகள். உள்ளே நுழைந்ததும் ஜீன்ஸ் துணியில் 'ஏசு அழைக்கிறார்' என்று நூலினால் எழுதுப்பட்ட வாசகம். உள்ளே அப்படி ஒரு அமைதி. 
 'இவ்வளவு சுத்தமாக யார் இதைப் பராமரிக்கிறார்கள்?' என்று கேட்டேன். 
'அதான் சொன்னேன் இல்ல, ஜான் டேவிட்.'
ஜான் டேவிட் மிக அமைதியானவர். எந்த நேரமும் புத்தகமும் கையுமாகவே இருப்பார். மாலை நேரங்களில் மற்ற கைதிகளுடன் கேரம் விளையாடுவார். அவருடைய செல் எப்போதுமே ஒரு மெல்லியத் திரையால் மூடியே இருக்கும். அவருடைய அம்மா, சிறப்பு அனுமதி பெற்று சிறைக்குள் அடிக்கடி வருவார். மற்ற கைதிகளுக்குத் தேவையான மருந்துகளையும் உணவுப் பொருள்களையும் கொண்டுவருவார். எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார்.

நாவரசு கொலை வழக்கு பற்றிய தடயம் நிகழ்ச்சி.


6-Nov-1996 நாவரசு கொலை செய்யப்பட்டார்
11-Mar-1998 ஜான் டேவிட் குற்றவாளி என்று கடலூர் டிஸ்ட்ரிக்ட் செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு
5-Oct-2001 : சென்னை உயர் நீதிமன்றம் "போதிய ஆதாரம் இல்லை" என்று சொல்லி  ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர்
20-Apr-2011 : இந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தாமல், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்​டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடி​யாது என்று குறிப்பிட்டதோடு, ''ஜூனி​யர் மாணவரான நாவரசுவை, ராகிங் என்கிற பெயரில் திட்டமிட்டு சீனியர் மாணவர் ஜான் டேவிட் கொலை செய்தது, ஆதாரப்பூர்வமாகவும், சாட்சிகள் மூலமாகவும் உறுதி செய்யப்​பட்டு இருப்பதால், ஜான் டேவிட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்​படுகிறது. எனவே, ஜான் டேவிட் கோர்ட்டில் உடனடியாக சரணடைய வேண்டும்!'' என்று சுப்ரீம் கோர்ட் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

தான் செய்தித்தாள் படித்த அனுபவத்தை பக்கம் 56இல் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பேப்பரைப் பிரித்தேன். துண்டு துண்டாகக் கிடந்தது. ஆங்காங்கே, வெட்டி இருந்தது. 
'என்ன சார்? பேப்பரை வெட்டியிருக்காங்க!' என்று கேட்டேன்.
'அதுவா! ஜெயிலுக்குள்ள பொதுச் செய்தியைத் தவிர வேற எந்தச் செய்தியும் கைதிகளுக்குத் தெரியக்கூடாதுன்னு சென்சார் பண்ணிடுவாங்க தம்பி.'
கைதி தப்பி ஓட்டம், மற்ற சிறைகளில் நடக்கும் சிறைக் கைதிகளின் போராட்டம், சிறைக் கலவரம் போன்ற நிகழ்ச்சிகள் கைதிகளுக்குத் தெரியக்கூடாதென்று நினைத்தது சிறைத்துறை. அப்படித் தெரிந்தால் மற்ற சிறைகளில் உள்ளவர்களும் இது போன்ற செய்லகளில் ஈடுபட்டுவிடுவாரகள் என்று நினைத்து அதுபோன்றச் செய்திகளைத் தணிக்கை செய்து அனுப்பி விடுவார்கள்.


பிரேமானந்தா சாமியாரைப் பற்றி நூலாசிரியரின் சிறை நண்பர் கூறியவை.
சாமி செல்லவிட்டுட்டு வெளியவே வரமாட்டாரு தம்பி. வாரா வாரம் வியாழக்கிழமை அன்னிக்கி அவங்க ஆசிரமத்து ஆளுங்க வருவாங்க. அன்னிக்கிபூரா அவருக்கு மனு ரூம்லதான் வேலை இருக்கும். ஆசிரமத்து கணக்கு வழக்கு பாக்கிறது, ஆளுங்களை வேலைக்கு வைக்கிறதுன்னு ஒட்டுமொத்த நிர்வாகமும் இங்கேயிருந்தே நடக்கும். வியாழக்கிழமையானா, கடலூர் ஜெயில்ல வேலை பாக்கிறவங்களுக்குச் சம்பளத் தேதி மாதிரிதான். சாமி கையில வியாழக்கிழமைன்னா கத்தை கத்தையா பணம் இருக்கும். சாமி எப்ப தண்டனை வாங்கி இங்க வந்தாரோ, அன்னிக்கே ஆசிரமத்தோட ஆபிஸ் இந்த ஜெயிலுக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு கட்டடத்துக்கு வந்துடுச்சு. அதுவும் சொந்தக் கட்டடம். என்னமோ, ஏதோ பண்ணிட்டு ஜெயிலுக்குள்ள வந்துட்டாரே தவிர, சாமி  ரொம்ப நல்லவரு. யாருக்காவது கஷ்டம்னா உடனே உதவி பண்ணுவாரு. இங்க ஜெயிலுக்குள்ள வந்த சில பேரு ஜாமீன் எடுக்கக்கூட வசதியில்லாத நிலைமைல இருந்தாங்க. அவங்களை சாமி தன்னோட ஆளுங்க மூலமா ஜாமீன்ல எடுத்து உதவி செஞ்சாரு. தண்டனைக் கைதிகளுக்கு ஏதாவது குடும்பக் கஷ்டம்னா பண உதவியெல்லாம் செய்வாரு. உள்ள இருந்த குற்றவாளிங்க வெளியே போறப்போ பல பேருக்கு வேலையே போட்டுக் குடுத்திருக்காரு. எப்பிடிப் பாத்தாலும் சாமியால பலபேரு பொழப்பு ஓடத்தான் செய்யுது.

ஒவ்வொரு வருடமும், மஹாசிவராத்திரி இரவில், சிவலிங்கத்தை எடுப்பாராம் .



விஜய் டிவியின் நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் அவரது சிறப்பு பேட்டி.






அவர் நடந்தது என்ன? 2ஆம் பாகத்தில் (29-செப்டம்பர்-2010)  "டாக்டர் இன்னும் 6 மாசமோ 1 வருஷமோ இருப்பெங்குறாங்க." என்று கூறியவாறே 21-பிப்ரவரி-2011 அன்று இயற்கை எய்தினார். மஹாசமாதி என்று தவறாக கூறப்பட்டுள்ளது.


Sri Premannda மற்றும் Justice for Premanda என்ற இணைய தளங்களில் நிறைய விஷயங்கள் உள்ளன.


அடுத்ததாக புழல் சிறைக்குச் சென்ற பொழுது முதல் வகுப்பு கைதிகளுக்கான சிறையில் டாக்டர். எல். பிரகாஷை பார்த்துள்ளார். மாலை நேரங்களில் அவர் பேட்மிட்டன் விளையாடுவாராம். அவர் எழுதிய சில புத்தகங்களைப் படித்துள்ளேன். குறிப்பாக சிறையின் மறுபக்கம் என்ற புத்தகத்தில், சிறையில் அவர் அனுபவித்த கஷ்டங்களை எழுதியுள்ளார்.

டாக்டர். எல். பிரகாஷைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பின்வரும் இணையதளங்களைக் காணவும் (Naughty Dr, Official Homepage of Dr L.Prakash India's Most prolific author, Dr. L. Prakash Tripod).

BSA சைக்கிள் கம்பெனி ஸ்பொன்சர் செய்த மேஜிக் ஷோ.



1985இல் சென்னை தூர்தர்ஷனின் 10வது ஆண்டு விழாவையொட்டி டாக்டரின் மேஜிக் ஷோ.



Some of the Naughty stories in his own voice.



புழல் சிறைக்கைதிகளின் கைவண்ணங்கள்.


பல வலைத்தளங்களில் அவர் எந்த குற்றமும் செய்யாதவர் என்று கூறுகின்றன (Deccan Chronicle, New Indian Express).



ஆனால், அவர் கடத்தல், கற்பழிப்பு வழக்குகளில் மட்டுமே குற்றமற்றவர். சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பார்த்தால் பல விபரங்கள் தெரியும்.



அடுத்தது லாக்கப் என்ற புத்தகத்தைப் படிக்க வேண்டும். இதை வைத்து எடுத்த படம் தான் விசாரணை.

19 August, 2018

Historical places near Tirunelveli

My native place is near Tiruchendur. Twice a year, we would go to our native place. Often, we would get down at Tirunelveli and go by cab to Tiruchendur. Some years back, when we were going in the cab, I noticed an arch mentioned as Mudhumakkall Thaazhi. I ignored and years passed. When the news about Keezhadi was in the media, Adichanallur (near Tirunelveli) was mentioned. Then, I googled and was very much surprised to watch the below video:


Though I am not convinced by the author's views, it kindled my curiosity. When I checked in Google Maps, it showed the route we usually go. Then, I shared the route with my brother and told him about my interest to visit that place.

When I went to Chennai Book Fair, I saw the book ஆதிச்சநல்லூர் - கீழடி: மண் மூடிய மகத்தான நாகரிகம் and bought it. My mom's native place (Therikkaadu) is also mentioned in the book. When we were kids, my mom had told lots of stories about aged people kept inside a pot, Treasures, Black Magic and Curses that happened in her native place. Those days, we were very curious to listen to those stories. Now, I could recall them and associate with this book. Other places like Krishnapuram, Korkai, Kulasekarapattinam are also mentioned. I have expressed my thoughts about the book in my blog post.

Fortunately, one of my friends was getting married in Tiruchendur. After reading this book, I spoke to the cab driver and requested him to take me to some of the historical places near Tirunelveli like Korkai, Arumuga Mangalam Sudalai Madan Kovil, Adichanallur and Krishnapuram. He was not at all aware of Adichanallur. Later, I gifted him a copy of the book.

First we went to Korkai. 2000 years back, it was located on the banks of Thamirabarani river and at the sea coast, forming a natural harbour. Due to excessive sedimentation by Thamirabarani, the sea had receded away by about 6 Km.









The below video gives more information about Korkai.


Next, we went to Arumuga Mangalam Sudalai Madan Kovil. While planning for the trip, I told my parents that I will be going to Arumuga Mangalam Sudalai Madan Kovil. They were a bit shocked. My dad strictly told: Don't take anything from the temple and don't eat anything. This temple is (in)famous for Black magic and Witchcraft. My mom had told lots of stories about this temple. When I told the driver to go to this temple, he immediately asked for the purpose of my visit. He doubted that I might be visiting the temple to pay a huge amount for some rectifications. I explained him about my curiosity to visit the temple and not related to Black magic. As I prayed and got the holy ash, there was an aged, depressed couple standing near me and talking with the Poojari. I felt, the Poojari got a victim and will get a good payment.



The real story behind this temple is well explained by a lawyer. And there's another version too.

The fire-walking ceremony is very much crowded.


Moondravathu Kan did an episode about this temple.


It seems there is a very old Ganesh temple in Arumuga Mangalam. Due to time constraints, we didn't go. My brother shared the below information with me:


A blogger had revealed the secret about மருந்து எடுத்தல்.



Then, we started to Adichanallur.


A beautiful view of Thamirabarani.





As we went to the Pandiyaraja Temple, we saw a Samadhi. There were lots of Nerunji Mull. The driver helped me in removing them from my legs.




The Pandiyaraja Temple was closed. We just peeped inside the gate and went to search for the broken Urn pieces.



We found some broken pieces of pot and picked them.




A building with toilet facilities and a Park has been constructed for exhibiting the Mudhumakkal Thaazhi.





But, those have been vandalized by some unscrupulous elements. The driver told that if the Government had maintained them properly and collected a small fee, then the drivers will encourage the tourists/pilgrims and bring them to see such exhibits.


The sun was setting down. With a great sense of satisfaction, we left to Krishnapuram.


The driver's friend is in charge of this temple. He spent a lot of time in explaining the beautiful sculptures. I asked for the Sthala Varalaaru book. As it was out of stock, he gave me a Photocopy of the book. Photography is prohibited. But, the driver insisted me to take some Photographs.


As planned, we went to all the places and this trip was a memorable one.

When I dreamed to visit Ariyalur, one of friend's brother got married in Srirangam. With that I visited Ariyalur. Now, I got an opportunity to visit Adichanallur.

I used to wonder about the mummies in Egypt. Now, I am very happy that Adichanallur is very much accessible than Egypt.

25 January, 2018

ஆதிச்சநல்லூர் - கீழடி: மண் மூடிய மகத்தான நாகரிகம் - தினத் தந்தி


எனது சொந்த ஊர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ளது. வருடம் இரண்டு முறை என் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கி, திருச்செந்தூருக்கு காரில் செல்வோம். சில வருடங்களுக்கு முன், அவ்வாறு செல்கையில், முதுமக்கள் தாழி என்று குறிப்பிட்ட ஒரு வளைவைக் கண்டேன். பின் அதை மறந்துவிட்டேன். கீழடி பற்றிய செய்தி  வெளியான போது ஆதிச்சநல்லூர் பற்றி குறிப்பிட்டனர்.

ஆதிச்சநல்லூர் பற்றி Google Mapsல் தேடிய பொழுது, அந்த ஊர் நாங்கள் செல்லும் வழியில்தான் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். எனது அண்ணனிடம், அந்த இடத்திற்கு ஒரு முறை செல்வோம் என்று கூறினேன்.

ஆதிச்சநல்லூர் என்பது 114 ஏக்கர் மயான பூமி. இந்த ஒரு வரி போதும் பரபரப்பை ஏற்படுத்த. 

சிறிது நாட்களுக்கு முன் நடந்த புத்தக் கண்காட்சியில், இந்த புத்தகத்தை வாங்கினேன். எனது அம்மாவின் சொந்த ஊரான தேரிக்காடு பற்றியும் நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, உணவு சாப்பிடும் சமயம், என் அம்மா பல கதைகளைக் கூறுவார். வயதான முதியவர்கள் தங்களது இறுதி நாட்களில் பெரிய மண் பானைக்குள் வைக்கப்படுவர், புதையல், மாய வித்தைகள், சாபங்கள் என்று தன் ஊரில் நடந்ததாகத் தான் சிறு வயதில் கேள்விப்பட்டவைகளைக் கூறுவார். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது அவற்றை தொடர்புபடுத்த முடிகிறது. கிருஷ்ணாபுரம், கொற்கை, குலசேகரப்பட்டினம் போன்ற ஊர்களும் புத்தகத்தில் இடம் பெறுகின்றன.

Googleல் தேடிய பொழுது அலெக்சாண்டர் ரீயா எழுதிய Catalogue of the Prehistoric Antiquities from Adichanallur and Perumbair புத்தகம் கிடைத்தது. அலெக்சாண்டர் ரீயா கண்டெடுத்தவைகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் உள்ள பொக்கிஷங்களை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். எகிப்தில் இருக்கும் மம்மிகளைக் கண்டு வியந்துள்ளேன். ஆதிச்சநல்லூர் அதைவிட பிரம்மாண்டமானது என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

எனது வீட்டில் உள்ள  அனைவரையும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்படி கூறியுள்ளேன்.

21 January, 2018

முதல் வேட்டையும் முதல் கொலையும்! - நக்கீரன்


நக்கீரன் பத்திரிகையின் முதல் நூல் இது.

நக்கீரன் நிருபர்கள் வீரப்பனை பல மணி நேரங்கள் எடுத்த பேட்டி, நூல் வடிவமாக வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தில் சில படங்கள் மட்டும் கலர் படமாக உள்ளது. அனைத்து படங்களும் கலர் படமாக இருந்தால் நன்றாக இருக்கும். இடது கரை வரும் பக்கங்களில் வீரப்பனின் சிறிய படத்தை போட்டுள்ளதால் பக்கத்தின் விளிம்பு அதிகமாக உள்ளது. இதை தவிர்த்திருந்தால் பக்கங்கள் குறைந்திருக்கும்.

சில மாதங்களுக்கு முன் Veerappan: Chasing the Brigand என்ற புத்தகத்தை படித்தேன். இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது எனக்கு விருமாண்டி படம் நினைவுக்கு வருகிறது. பசுபதியின் பார்வை போல் Veerappan: Chasing the Brigandம், கமலின்  பார்வை போல் இந்த புத்தகமும் உள்ளது.

"வீரப்பன் எங்களுக்கு முதல் எதிரி என்றால் நக்கீரன்தான் அடுத்த எதிரி" என்று தேவாரம் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்ததுடன், காட்டுக்குள் நக்கீரன் நிருபர்களை கண்டால் சுட்டுத்தள்ளுங்கள் என்று அதிரடிப்படைக்கு வாய்மொழி உத்தரவும் போட்டிருந்தார் (பக்கம் 26).

அதிரடிப்படையால் அப்பாவி மக்களை துன்புறுத்துகின்ற இடம்தான்  ஒர்க்ஷாப். அந்த சித்ரவதைகள் சோளகர் தொட்டி என்ற புத்தகத்தில் விவரமாக எழுதப்பட்டுள்ளது.

நக்கீரன் நிருபர் சிவா அவர்கள் வீரப்பனுடன் 5 நாட்கள் தங்கியிருந்து 9 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு வீடியோ பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டி, 1996ம் ஆண்டு ஏப்ரல் 7ந் தேதியன்று வீரப்பனுடன் நேருக்கு நேர் என்று சன் டிவியில் ஓளிபரப்பப்பட்டுள்ளது.

வீரப்பன் 13 வயதிலே துப்பாக்கியை எடுத்து 14 வயதில் பயங்கர வேட்டைக்காரனாகியுள்ளான்.

"வெறும் 11 மாசம் தான் சந்தன மரம் ஓட்டினேன். ஆனால் பேரு மட்டும் இப்படியாகிப்போச்சு. அதில என்ன வந்திருக்கும்...ஒரு கோடி ரூபாய் வந்திருக்கும் எல்லாம் ஜனங்களுக்குத்தான் கொடுத்தேன். அவ்வளவுதான் பல வருஷம் ஓட்டி, பல ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாரிச்சவன் எல்லாம் சம்பாதிச்சான். ஒரு மசிருமில்லை. வேணும்னா பேரு மட்டும் கிடைச்சுது. (பக்கம் 101)

Veerappan: Chasing the Brigand என்ற புத்தகத்தில், மக்களுக்காக நிதி திரட்டியும், தான் பெரிய தொகையை கொடுத்தும், கோபிநத்தத்தில் ஒரு கோவிலை DFO சீனிவாசன் கட்டினார் என்று ஆசிரியர் புகழ்ந்துள்ளார். ஆனால், இந்த புத்தகத்தில், உண்மை வேறு விதமாக உள்ளது. ஒவ்வொரு பட்டிக்கும் சென்று ரெண்டு ஆடுகளை மிரட்டி வாங்கி, ஏலம் விட்டு அந்த பணத்தை வைத்து கோயில் கட்டியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. வீரப்பன் பேசும் பொழுது பாதகத் துரோகிகள் என்று கூறுவது ரசிக்கும்படியாக உள்ளது.

ஆயிரம் யானையை தசரதன் கொன்றான் என்ற கதையை இதுவரை எங்கும் படித்ததில்லை. வீரப்பனின் பேட்டியின் மூலம் தெரிந்து கொண்டுள்ளேன்.